Friday 25 November 2011

Marriages in police stations

Don't conduct marriages in police stations: court

Says young couples may not have clear vision of future

MADURAI: The Madras High Court Bench here has said that it is high time the Director General of Police (DGP) issued necessary instructions to his subordinates asking them not to conduct marriages in police stations in the interest of young couples who are prone to take decisions without a comprehensive understanding of the consequences.

A Division Bench comprising Justices P. Murgesen and T. Mathivanan said: "It is appropriate to note that nowadays marriages are performed in police stations. Of course, it is done by the police officials with good intentions. However, some young people who are under the influence of so-called 'love' might approach the police for conducting their marriages without a clear vision of their future."

The observations were made while disposing of a habeas corpus petition filed by the mother of an 18-year-old boy from Madurai who was allegedly coerced to marry his cousin by her parents and the police. The boy confirmed that he was forced to marry the girl. However, he told the court that the marriage took place outside the police station.

Recording the submission made by the boy that he was not facing any kind of threat from the police at present and after hearing the petitioner's counsel R. Alagumani, the judges set the boy at liberty as he was a major.

© Copyright 2000 - 2009 The Hindu

Courtesy_

Judgement

அருமையான தீர்ப்பு...

Tuesday 22 November 2011

Government Law College Tirunelveli.

Government Law College Tirunelveli.
திருநெல்வேலி அரசு சட்ட கல்லூரி மாணவர்களின் சங்கமம் படம்.

பொக்கிஷங்கள்


33. பொக்கிஷங்கள் 
நன்றி ஈகரை 
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர்இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Sunday 13 November 2011

Makkal Nala Paniyalargal.

மக்கள்நல பணியாளர்கள்.
நன்றி எல்.ஐ.சி. பாளையம்கோட்டை.

Sunday 6 November 2011

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தலித் நீதிபதி படும்பாடு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தலித் நீதிபதி படும்பாடு!
சென்னை: தசலித் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மற்ற நீதிபதிகள் சிலர் தன்னை அவமானப்படுத்துவதாகவும், பொறுக்க  முடியாத அளவுக்கு தனது தன்மானத்தை சோதிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ் கர்ணன் புகார் கூறியுள்ளார்.
அவரது இந்தப் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளே சாதி வெறி பிடித்து அலைவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தந்துள்ளார். ஜனாதிபதிக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் புகார் மனுவின் நகல்களை அவர் அனுப்பியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் வியாழக்கிழமை நீதிபதி கர்ணன் கூறுகையில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு சிலர், நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.
எனது புகார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், ஊடக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் எனது புகாரை நிரூபிப்பேன்.
எனக்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தே இந்த அவமரியாதைகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால், நீதிமன்ற மாண்பை காப்பதற்காக இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தேன். இதனால் தான் இதுவரை இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன்.
நான் சுயமரியாதை உள்ளவன். அதனால் தான் என்னை குறி வைக்கின்றனர். எனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஏன் புகார் சொல்லவில்லை என்று கேட்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை.
தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷன், ஒரு கண்காணிப்பு அமைப்பு. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், அதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த கமிஷனுக்கு உள்ளது. ஜனாதிபதியின் கீழ் இந்த கமிஷன் இயங்குகிறது. இதனால்தான் நேரடியாக அங்கேயே புகாரை சொன்னேன்.
என்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை விசாரணையின் போது கூறுவேன். தேநீர் விருந்து, மதிய உணவு, டின்னர், நீதிபதிகள் குழு என நீதிபதிகள் ஒன்றாக கூடும் இடங்களில் எல்லாமே நான் அவமானபடுத்தப்பட்டேன். நீதிமன்ற விழாக்களில் நான் பங்கு பெற வாய்ப்பு கூட அளிப்பதில்லை.
ஷூ காலால் மிதித்த சக நீதிபதி
ஒரு திருமண நிகழ்ச்சியில் என்னை ஷூ அணிந்திருந்த ஒரு நீதிபதி வேண்டுமென்றே காலால் மிதித்துவிட்டு, பின்னர் ஸாரி என்றார். குடியரசு நாள் கொண்டாட்டத்தின்போது மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என் பெயர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கிழித்து கீழே எறிந்து காலால் போட்டு மிதித்தார் இன்னொரு நீதிபதி.
இந்த சம்பவங்களை இரண்டு சக நீதிபதிகள் நேரில் பார்த்தனர். எனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி, மற்ற நீதிபதிகளிடம் நான் தெரிவிக்கவில்லை. இது ஒரு கருப்பான அத்தியாயம்.
நீதிபதிகள் சிலருக்கு குறுகிய மனப்பான்மையும், ஜாதி ரீதியில் ஆதிக்க மனப்பான்மையும் உள்ளது. அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளிடம் காட்டுகின்றனர்.
நீதிபதிகள் அனைவரும் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஜாதிரீதியிலான பாகுபாடு மன வேதனை தருகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகள் அவமரியாதை செய்யப்படுகின்றனரா? என்று கேட்டதற்கு, நான் சுயமரியாதை இருப்பதால் தான் கஷ்டங்களை எதிர்கொள்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர், சுயமரியாதையை கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால், நான் சுயமரியாதையை கடைபிடிப்பதால்தான், கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் கனகராஜ், அசோக்குமார், பி.டி.தினகரன், வெங்கடாசலம், ஜெயபால் ஆகியோர் சுயமரியாதை உள்ளவர்கள். என்னைப் போலவே அவர்களும் பிரச்சனைகளை அனுபவித்தனர். மிகுந்த நீதிமானாகத் திகழ்ந்த அசோக்குமாருக்கு நேர்ந்த அவமானங்கள் கொஞ்சமல்ல.
உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல தலித், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மீது கூட துன்புறுத்தல் இருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் எனது புகார் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். எனது புகார் தொடர்பாக எப்போது என்னிடம் கேட்டாலும் உரிய ஆதாரங்களை அளிப்பேன். அவமானப்படுத்தியவர்களின் பெயர்களையும் வெளியிடுவேன்.
அதுவரை இந்த விவகாரத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்,” என்றார்.
நீதிபதி கர்ணனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அவரைச் சந்திக்கவே முடியவில்லை.

நெருப்பு இல்லாமல் புகை வருவது இல்லை. சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் சந்திக்காத சாதீய கொடுமைகளை வேறு எவரும் சந்த்தித்ருக்க மாட்டார்கள். அந்த கொடுமைகளுக்காக போராடியதன் விளைவே தலித்துகளுக்கு இவளவாவது சுதந்திரம் கிடைத்தது.. மீண்டும் ஒரு சுதந்திர போர் வரவேண்டும். தலித்துகளை இளக்காரமாக பார்ர்கும் தேச, சமூக துரோகிகளை வேரறுக்க வேண்டும். உலகத்தின் உயர்ந்த பதவி, கடவுளுக்கு நிகரான பதவி வகிக்கும் நீதிபதிகள் இப்படி நடந்துகொள்வது கேவலமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும். இருபத்தோன்றாம் நூற்றாண்டை தாண்டினாலும் மாறாத இந்த கொடுமை என்றுதான் மாறுமோ?

Wednesday 2 November 2011

குறுஞ்செய்தி (SMS)



கவனகர் முழக்கம் மாத இதழில் வெளியான ஒரு சிந்திக்கவைக்கும் 
குறுஞ்செய்தி (SMS)
ஒருமுறை காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபில்,திக்விஜய்சிங், ப.சிதம்பரம் ஆகிய மூன்றுபேரும் ஹெலிகாப்டரில் பயணம் சென்றார்கள். அப்போது கபில்சிபில் 100 ரூபாய் தாள் ஒன்றை தரையை நோக்கி வீசிவிட்டு "நான் இன்று ஒரு ஏழை இந்தியனை மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
உடனே திக்விஜய்சிங் இரண்டு 50 ரூபாய் தாள் ஒன்றை தரையை நோக்கி வீசிவிட்டு "நான் இன்று இரண்டு  ஏழை இந்தியனை மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
உடனே நம் கஞ்ச பிரபு  ப.சிதம்பரம் 100  ஒரு ரூபாய் சில்லறைகளை தரையில் வீசினர். "நான் இன்று நூறு   ஏழை இந்தியர்களை  மகிழ்ச்சி படுத்திவிட்டேன்!" என்று பெருமையுடன் சொன்னார்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் பைலட் " இப்போது நான் உங்கள் மூவரையும் தரையில் வீசி 125 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சிப் படுத்தப்போகிறேன்! என்றாராம்.

Tuesday 1 November 2011

சிரிக்க சிந்திக்க

படங்களை பார்த்து கருத்து கூறுங்கள்.. 





Funny Pictures --




எல்லா படமும் இணையத்தில் எடுத்தவைகள்தான்.. பார்த்து பதில் கூறுங்கள்..